just think

Thursday, April 30, 2015

பொறியியல் படிப்பில் சேர என்னென்ன ஆவணம் தேவை

அண்ணா பல்கலை கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், மே, 6ம் தேதி முதல், 29ம் தேதி வரை அண்ணா பல்கலை மையத்திலும், மே, 27ம் தேதி வரை, மற்ற, 59 மையங்களிலும் வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2 தேர்வு முடிவு வரும் முன், தேவையான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்குமாறு, அண்ணா பல்கலை அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை இருப்பிடமாகக் கொண்ட மாணவர்கள், எட்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, ஏதாவது ஒரு வகுப்பில் தமிழகத்தில் படிக்காமல் இருந்தால், அவர்கள் தமிழக வசிப்பிடச் சான்றிதழ் ஆன் - லைன் நகல் வைத்திருக்க வேண்டும்.இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறைப் பட்டதாரியாக இருந்தால், அதற்கான சான்றிதழும் தயாராக வைத்திருக்க வேண்டும்.முன்னாள் ராணுவத்தின ரின் வாரிசு, சுதந்திரப் போராட்ட வீரரின் வாரிசு, உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், செவித்திறன் குறைவு போன்ற முன்னுரிமை கேட்கும் மாணவர்கள், அதற்கான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

மாவட்ட நூலகங்களில் ப்ளஸ் 2 மதிப்பெண் பட்டியலை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்

வருகிற மே 7ம் தேதி வெளியாக உள்ள +2 தேர்வு முடிவுகள் மற்றும் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.
மாணவ மாணவிகள் தேர்வு முடிவுளை இலவசமாக பார்க்கவும், மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யவும் மாவட்ட நூலகங்கள் மற்றும் கன்னிமாரா நூலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி மூன்று நாட்களுக்கு மட்டுமே இலவ்சமாக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொது நூலக இயக்குனரகத்திலிருந்து விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, April 29, 2015

மாணவர்களுக்கு உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்க கல்வித்துறை உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் படிக்க விரும்பும் உயர்கல்வி, பொறியியல், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த பாடப்பிரிவுகள், வேலைவாய்ப்புகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை, சிறந்த ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மூலம், கோடை விடுமுறையில் வழங்க வேண்டும்.

உயர்கல்வி பாடங்களுடன் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள், இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் அதற்குரிய கல்வித் தகுதிகள் குறித்த ஆலோசனைகளை, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுடன், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சாதனையாளர்களோடு இணைந்து, ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி ஆய்வக உதவியாளர் பணி - விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6

 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு கடந்த 4 நாள்களில் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் தங்களது விண்ணப்பங்களை இணைய வழியில் (ஆன்-லைன்) பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வக உதவியாளர்கள் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு மே 31-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களிலேயே இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
உரிய சான்றிதழ்களுடன் சென்று இந்த மையங்களிலேயே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி மே 6 ஆகும்.
இந்தத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடித்து வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வக உதவியாளர் பணி நியமனம் அந்தந்த மாவட்ட அளவில் நடைபெறுகிறது.

Tuesday, April 28, 2015

6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு

சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்படும்.


ஜூன் முதல் வாரத்தில், சிறப்பு முகாம் நடத்தி, பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்!

 தவறாக அச்சிடப்பட்ட கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்க, மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. இதுதொடர்பாக, தமிழக அரசுக்கு மனுக்கள் அனுப்பப்பட்டன.
அவற்றுக்கு, அரசு தேர்வுகள் இயக்கக துணைத் தலைவரும், தகவல் வழங்கும் அலுவலருமான ஜோ.லூர்து சகாயராணி, பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அச்சுப்பிழையால் ஏற்பட்ட வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தாலேயே, மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என, விடைத்தாள்கள் திருத்தும் ஆசிரியர்களுக்கு, ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் திறமையான ஆசிரியர்களை கொண்டு, தவறு இல்லாத வினாத்தாள் தயாரிப்பது மற்றும் பிழை இல்லாமல் அச்சடிப்பது போன்ற நிலைகளில், அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Monday, April 27, 2015

கூலி தொழிலாளி மகள் சாதனை: நீதிபதி தேர்வில் தமிழகத்தில் முதல் இடம்

சிவில் நீதிபதி தேர்வில் நாமக்கல்லைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ். இவரது மனைவி ஜெய்சூரியா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

இவரது மகள் விபிசி(25), திருச்செங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 முடித்து விட்டு திருச்சி அரசு சட்டக்கல்லூரியில் பிஎல் படித்தார்.
இதையடுத்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான தேர்வை எழுதினார். தமிழகம் முழுவதும் இந்த தேர்வினை மொத்தம் 6172 பேர் எழுதினர்.
இதில் 590 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களிடம் நேர்முக தேர்வு, சான்று சரிபார்த்தல் ஆகியவற்றில் 314 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், விபிசி 323.75 மதிப்பெண் பெற்று, தமிழக அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரை திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதி சண்முகம் உட்பட பலர் வாழ்த்தினர்.

கலந்தாய்வுக்கு கல்வித்துறை ஆயத்தம்; பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பட்டியல் தயாரிப்பு


பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

  இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முந்தைய அறிவிப்பின்படி 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். 35 வயதை கடந்தவர்கள் வயது வரம்பு கட்டுப்பாடு காரணமாக விண்ணப்பிக்க முடியவில்லை.
எனவே, அவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு மே மாதம் முதல் வாரம் அல்லது 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத்தேர்வு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் நடத்தப்படும். ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sunday, April 26, 2015

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் ( அசல் மற்றும் நகல்கள் )

(*கட்டாயம் தேவைப்படுவன)
1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) *சாதி சான்றிதழ்
3) *வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ்

5) உயர்கல்விக்கான சான்றிதழ்
6) பணி முன் அனுபவம் இருந்தால் அதற்கானச் சான்றிதழ்
வயது வரம்பு :
SC/ST & Destitute widows of all community. - 35 வயதுக்குள்
BC, MBC/DC & BC Muslim community. - 32வயதுக்குள்
Others - 30 வயதுக்குள்
குறைந்தப்பட்ச கல்வித்தகுதி SSLC
+2 , Degree அல்லது அதற்கு மேலும் கல்வித்தகுதியைப் பெற்றுள்ள BC, MBC, SC, ST & BC (Muslim) விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு இல்லை.(57 வயது வரை)
கட்டணம் :
Rs.100 + Rs.50 service charge
SC, SC(A), ST , Destitute Widows & Physically Challenged persons க்கு தேர்வுக்கட்டணம் Rs. 100 செலுத்த தேவையில்லை.
(முக்கிய குறிப்பு-தேர்வுக்கு ஏதாவது ஒரு மாவட்டத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியம் எந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கிறீா்களோ அந்த மாவட்ட காலிப்பணியிடத்திற்கு மட்டுமே போட்டியிட முடியும்)

அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

 தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிய 4,362 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. குறைந்த பட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும்.


இதற்காக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவித்துள்ள நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் பலர் விண்ணப்பித்தனர். விண்ணப்பிக்க மே 6-ந்தேதி கடைசி நாள். நேற்று ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31-ந்தேதி நடைபெற உள்ளது.


அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் பணிக்கு 30 ஆயிரம் பேர் விண்ணப்பம்: பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

Saturday, April 25, 2015

மாணவர்கள் கடத்தலை தடுக்க பள்ளியின் வாசலில் அறிவிப்பு பலகை

போலீசாரை தொடர்பு கொள்ளும் வகையில், அரசு பள்ளி அருகே, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. வளசரவாக்கம் பகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளின் நுழைவாயில்களில், காவல் துறை சார்பில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் கூறியதாவது:

சென்னையில், மாணவர்கள் கடத்தலை தடுக்கும் விதமாக, அனைத்து பள்ளிகளின் நுழைவாயில்களிலும், அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். பள்ளியின் முன்பு, யாரேனும் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்தால் உடனே தொடர்பு கொள்ள, தொடர்பு எண்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன், ஆற்காடு சாலையில் உள்ள அரசு பள்ளியின் நுழைவாயிலில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை உபயோகமாக உள்ளதாக, பல பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்

 இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது:


பாடங்களுக்கென விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஒரே விண்ணப்பத்தில் வேறு பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் அட்டவணை, கட்டாயம் இடம்பெற வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான, 10 நாட்களுக்குள், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் நகல்களை கொண்டு, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை தர பட்டியல், 14 நாட்களுக்குள் அறிவிப்பு பலகையில் இடம் பெற வேண்டும். வரும் ஜூலை 1ம் தேதி நிலவரப்படி, 21 வயது நிரம்பியவர்கள் மட்டுமே இளங்கலை படிப்புக்கு தகுதியானவர்கள்.

Friday, April 24, 2015

4 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட முடிவு

 மகாராஷ்டிராவில் 4000 அரசு பள்ளிகளை மூட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால்,
4000 அரசு பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே படித்து வருவதால் அவற்றை மூட அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கிழிந்த பழைய ரூபாய் நோட்டுக்களை 25ம்.தேதி மாற்றிக்கொள்ளலாம்

கிழிந்த பழைய நோட்டுகள் இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: பழைய, கிழிந்த மற்றும் அழுக்கான, குறிப்பாக சிறிய மதிப்பிலக்க 10, 20, 50 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றி, அவற்றுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வழங்கப்படவுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சுத்த நோட்டுக் கொள்கையின் கீழ், தனிச் சிறப்பு ஏற்பாடாக நாளைக்கு (25–ந் தேதி) 32 வணிக வங்கிகளின் 195 கிளைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதோடு, கிழிந்த, சிதைந்த நோட்டுகள் மற்றும் குறைபாடுடைய நோட்டுகளையும் குறிப்பிடப்பட்ட வங்கிக் கிளைகளில் நாளை மாற்றிக்கொள்ளலாம்.

மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம்

 எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மே 11ம் தேதி முதல் வழங்கப்படும் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், மே 11ம் தேதி முதல் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் தேர்வு பாடத்திட்டம்

Syllabus and Pattern for Tamil Nadu School Lab Assistant Jobs:

1. Science (SSLC Standard Level)

2. General Knowledge

TNDGE Tamil Nadu School Lab Assistant Exam Pattern:

Science = 120 Questions

General Knowledge = 30 Questions

Total = 150 Questions

Mark Split up



Book List for Study Materials for TNDGE Tamil Nadu School Lab Assistant Exam

Science

(120 Questions) Give More Importance to Science Topics)

Subject

Preferred Books

Biology

6th- 10th Samacheer Kalvi Biology Books

Physics

6th- 10th Samacheer Kalvi Physics Books

Chemistry

6th- 10th Samacheer Kalvi Chemistry Books

General Knowledge

(30 Questions)

History

6th- 10th Samacheer Kalvi History Books

Geography

6th- 10th Samacheer Kalvi Geography Books

Economics

6th- 10th Samacheer Kalvi Economics Books

Civics/Polity

6th- 10th Samacheer Kalvi Civics Books

And daily news paper current affairs(HINDU)

அரசுப்பள்ளி ஆய்வக உதவியாளர் மாவட்டவாரியாக காலிப்பணியிட விவரம்

Tamil Nadu District Wise
Thiruvallur – 179
Salem - 176
Chennai – 33
Dharmapuri – 173
krishnagiri – 208

Coimbatore – 105
Nilagiri – 081
Tirupur – 141
Cuddalore - 166
villupuram – 317
Theni - 65
Dindigul – 96
Erode – 147
Madurai – 52
Ramanathapuram – 106
sivagangai – 105
Kanyakumari - 94
TirunelVeli - 108
Nagapattinam – 138
Thanjavur – 167
Ariyalur – 87
Karur – 84
Pudukkottai – 170
Tiruchirapalli – 144
perambalur – 41
Vellore -286
Other District in Tamil Nadu – 1067 ( Other District List of Post Notification Available Soon)
Educational Qualifications: 10th Pass

Thursday, April 23, 2015

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 21ம் தேதி வெளியாகிறது.

  தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபீதா இதற்கான அறிவிப்பை இன்று மாலை வெளியிட்டார்.


இரு தேர்வு முடிவுகளும் அன்றைய தினம் காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.
தேர்வு முடிவுகளை அரசின் இணையதளங்களில் மட்டுமே காண முடியும். அதன்படி கீழ்க்கண்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து மதிப்பெண் பட்டியலையும் பிரதி எடுத்துக் கொள்ளலாம்.

இணையதள முகவரிகள்:

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.dge3.tn.nic.in

பிறப்பு, இறப்பு பதிவுக்கும் 'ஆதார்' எண் அவசியம்!

  போலி சான்றிதழ்களை தடுக்க, பிறப்பு, இறப்பு பதிவுக்கும், 'ஆதார் எண்' அவசியம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த, ஜன., 1ம் தேதி முதல், நாடு முழுவதும், பிறப்பு, இறப்புகள் அனைத்தும், 'ஆன்லைனில்' பதிவு செய்யப்படுகிறது. இதற்காக, மத்திய சுகாதாரத் துறை, 'சிவில் ரிஜிஸ்ட்ரேஷன் சிஸ்டம் சாப்ட்வேர்' தயாரித்துள்ளது.

இந்த, 'சாப்ட்வேர்,' பிறப்பு, இறப்பு பதிவு அலுவலர்களான, மாநகராட்சி, நகராட்சி சுகாதார ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத் துறை ஆய்வாளர் ஆகியோரின் கம்ப்யூட்டர் மற்றும் 'லேப் - டாப்'களில் ஏற்றப்பட்டு உள்ளன. அனைவருக்கும், தனித்தனியாக, ஐ.டி., மற்றும் 'பாஸ்வேர்டு' வழங்கப்பட்டுள்ளன. போலி பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதை தடுக்க, பிறப்பு, இறப்புடன், 'ஆதார்' எண்ணையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிறப்பை பதியும்போது, பெற்றோரின், 'ஆதார்' எண்ணும், இறப்பை பதியும்போது, இறந்தோரின், 'ஆதார்' எண்ணும் பதிவு செய்ய வேண்டும்.

தொகுப்பூதியம் பெறுவோருக்கு தனிப்பட்ட தொகை உயர்த்தி அறிவிப்பு

  தொகுப்பூதியம் பெறுவோருக்கு, தனிப்பட்ட தொகையாக, மாதத்திற்கு 20 ரூபாய் முதல், 40 ரூபாய் வரை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அரசு அலுவலர்களுக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, திருத்தப்பட்ட தொகுப்பூதியம், நிலையான ஊதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு, ஜனவரி 1ம் தேதியில் இருந்து, தனிப்பட்ட தொகையை உயர்த்தி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 2006 ஜனவரி 1ம் தேதியில் இருந்து, மாதத்திற்கு, 600 ரூபாய் வரை தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 20 ரூபாய்; 600 ரூபாய்க்கு மேல் திருத்தப்பட்ட தொகுப்பூதியம் பெறுவோருக்கு, மாதம், 40 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.

Wednesday, April 22, 2015

DA 6% Announced with effect from 1.1.15


தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

  தமிழக அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு இவ்வுயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு!


அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.366/- முதல் ரூ.4620/- வரை சம்பள உயர்வு!

Tuesday, April 21, 2015

அரசு ஊழியர், ஆசிரியர்கள் அசையும் சொத்து, அசையா சொத்து வாங்க அனுமதி கோரும்போது கவனிக்க வேண்டியவை

ஆணயர்(கா.ப) ந.க. எண் :82801/எம்.3/2004-2. தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதி:1973, சார்விதி:2. அசையும் சொத்து -----------------------------

(1) ரூபாய் 15000/ க்கு மேல் அசையும் சொத்து வாங்கினாலோ, விற்பனை செய்தாலோ, நிர்னயிக்கப்பட்ட அதிகாரிக்கு (controling officer ) ஒருமாதத்திற்குள் உரிய நிதி ஆதாரம், சொத்து விபரங்களுடன் தெரிவித்தால் போதுமானது .
அசையா சொத்து. --------------------------

(1) காலி வீட்டுமனை அல்லது கட்டப்பட்ட வீடு வாங்கும் போது அதன் விலைமதிப்பை. (guiding value) அரசு பதிவுத்துறையிடமிருந்து பெற்று அனுப்பி வைக்க வேண்டும்.

(2) கட்டிடம் கட்ட உரிய அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
(3)கட்டிட மதிப்பு, அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் இணைக்கப்பட வேண்டும்.
(4)சொத்தோ அல்லது கட்டப்பட்ட வீடோ வாங்கப்படும் நேர்வில் உரிய பனம் ஆதாரம் (source of income ) அவசியம் இணைக்கப்பட வேண்டும்.
 (5) வங்கி கடன் எனில் அதற்கான சான்று, ஒப்புதல் கடிதம், தவணைத் தொகை, தவணை மாதம, ஊதியத்தில் கையில் எடுத்துச் செல்லும் தொகை குறிப்பிடப்பட வேண்டும்.

 (6) நபரின் ஊதியச்சான்று.

 (7)உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். குறிப்பு. ----------- அரசாணை எண் :409, P& AR 24/12/92 ன்படி அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினரால், குடும்ப உறுப்பினரின் தொகை மூலம் வாங்கப்படும் சொத்திற்கு முன் அனுமதி தேவை இல்லை. கவனத்திற்கு. --------------------' துறை ரீதியான கடன் பெற (department loan) பெற கட்டாயம் மேற்கண்ட துறை அனுமதி பெற வேண்டும்.

அரசு ஊழியர்களுக்கு அகிலேஷ் அரசு தாராளம்: 6 மாதம் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதி

  உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வருடத்தில் 6 மாதங்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் எனவும் அரசு ஊழியர்களுக்கு தாராளம் காட்டி உள்ளது.


உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அரசு விடுமுறை நாட்கள் வருடத்தில் 35 நாட்கள் முன்னர் இருந்தது. நேற்று அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவில் முன்னாள் பிரதமர்களான சரண்சிங், சந்திரசேகர், மற்றும் பீகார் முன்னள் முதல்வர் கர்பூரி தாக்கூர் ஆகியோரின் பிறந்த நாட்களை அரசு விடுமுறையாக அறிவித்து உத்தரவிட்டது. இதன் மூலம் அரசு விடுமுறை நாட்கள் எண்ணிக்கை 35 லிருந்து 38 ஆக உயர்ந்துள்ளது.மேலும் அரசு ஊழியர்கள் வருடத்தில் மொத்தம் 6 மாதங்கள் பணியாற்றினால் போதும் எஞ்சிய 6 மாதங்களை விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு சிறப்புத் தேர்வு


Monday, April 20, 2015

வரும் கல்வியாண்டிலிருந்து இரண்டாண்டு பி.எட்., எம்.எட். படிப்பு

  பி.எட்., எம்.எட். படிப்புக் காலங்களை வரும் கல்வி ஆண்டில் (2015-16) இருந்து இரண்டு ஆண்டுகளாக உயர்த்துவது நிச்சயம் என, தேசியஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்.சி.டி.இ.) தலைவர் சந்தோஷ் பாண்டா கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் இந்தப்புதிய வழிகாட்டுதல் கொண்டு வரப்பட்டுள்ளது; எனவே, எவ்விதமான தடைகள் வந்தாலும்புதிய வழிகாட்டுதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் பதிவு; போலியை ஒழிக்க நடவடிக்கை

  ரேஷன் கார்டுகளில், ஆதார் எண் இணைக்கும் பணி துவங்க இருப்பதால், தேவையற்ற பெயர்களை நீக்க வேண்டும். இரு வேறு இடங்களில் ஒரே பெயர் இருந்தால், இரண்டு கார்டுகளும் ரத்தாகும்,' என, குடிமைப்பொருள் வழங்கல்துறை எச்சரித்துள்ளது.


வாக்காளர் பட்டியலில், ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்த கட்டமாக, ரேஷன் கார்டுகளிலும் ஆதார் எண் இணைக்கும் பணி துவங்கும் என, குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?

 'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள்எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது.

தற்போது மதிப்பெண் சரிபார்ப்பு, விடை திருத்து மையப் பட்டியல் படி, மதிப்பெண் சி.டி., தயாரிப்புபோன்ற பணிகள் நடக்கின்றன. 22ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி துவங்க உள்ளது.இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:விடைத்தாள் திருத்தும் பணியை, ஏப்ரல், 17ல் முடிக்க திட்டமிட்டோம். சில நாட்கள் நீட்டித்து விட்டது.
வரும், 22ம் தேதி முதல், மதிப்பெண் பட்டியல் தயாரிப்புப் பணி துவங்கும். இந்த ஆண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாவதால், அதன் தயாரிப்புப் பணி அடிப்படையில், 'ரிசல்ட்' வெளியாகும் தேதி முடிவாகும்.எப்படியும், மே, 4ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், 'ரிசல்ட்' வெளியாகலாம்.

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!

 டெலிபோன் சரண்டர்களை தடுக்கும் வகையில் ஒரு அதிரடி திட்டத்தை பி.எஸ்.என்.எல். மே 1–ந் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதுவரையில் யாரும்எதிர்பார்க்காத வகையில் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது. பி.எஸ்.என்.எல். டெலிபோனில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளது. இது தரைவழி போனில் இருந்து பி.எஸ்.என்.எல். செல்போன், தரைவழி போன் மற்ற தனியார் நிறுவனங்களின்செல்போன், தரைவழி போன்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக பேசலாம். இந்தியாவிற்குள் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் இலவசமாக பேசும் வசதியை தர இருக்கிறது. இதன் மூலம் தற்போது உள்ள டெலிபோன் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதோடு மட்டுமின்றி புதிதாக சேர்க்கவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சலுகை திட்டம் மே 1–ந் தேதி முதல் நாடுமுழுவதும் நடைமுறைக்கு வருகிறது.
தற்போது உள்ள அனைத்து தரைவழி சந்தா தாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும்.

Sunday, April 19, 2015

கோடையில் பழங்களை ஏன் அதிகம் சாப்பிட வேண்டும்?

 இயற்கையின் பின்னணியில் நம் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பைத் தருவது, காய் - கனிகளே! அதிலும், ருசியையும், உடலுக்குச் சத்துகளையும் தாராளமாகத் தருவது இயற்கையாக விளையும் பழங்களே! ஆனால், ‘நாகரிக உணவுக் கலாசாரம்’ என்ற பெயரில் இயற்கை உணவு வகைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, செயற்கை உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம் உடலை நாமே கெடுத்துக்கொள்கிறோம்.
 முக்கனிகளை மறந்த தலைமுறை
மா, பலா, வாழை என முக்கனியைப் போற்றி கொண்டாடிய தமிழகத்தில்தான் பழங்களைச் சாப்பிடுவதையே குறைத்துக்கொண்ட தலைமுறையைக் காண்கிறோம். அதிலும் குறிப்பாக, இன்றைய இளைய தலைமுறை கோடையில் மென்பானங்களை அருந்துவதற்குத் தருகிற முக்கியத்துவத்தைப் பழங்களைச் சாப்பிடுவதற்குத் தருவதில்லை என்பது கவலைக்குரிய செய்தி.
தோல் தரும் பாதுகாப்பு
ஒரு போர்வைபோல் போர்த்தி உடலைப் பாதுகாக்கிற தோல்தான், நம் உடலிலேயே மிகப் பெரிய உறுப்பு. நம் மொத்த உடல் எடையில் 12-ல் ஒரு பங்கு தோலின் எடை. இதில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர்தான் இருக்கிறது. தோலுக்கு அழகூட்டுவதும் பாதுகாப்பு தருவதும் தண்ணீர்தான்.
உடலின் வெப்பத்தைக் கட்டுப்படுத்துவதில் தோலுக்குப் பங்கு இருக்கிறதென்றால், வியர்வை மூலம் அந்த வெப்பத்தைத் தணிப்பதற்கு உதவுவது இந்தத் தண்ணீர்ச் சத்துதான். உடலில் தண்ணீரின் அளவு எப்போதும் சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் உள்ள நீர்ச்சத்தும் உப்புகளும் குறைந்துவிடும். அப்போது பல வழிகளில் ஆரோக்கியம் கெடும்.
 பொதுவாக ஒருவருக்கு நாளொன்றுக்குத் தேவையான தண்ணீரின் அளவு மூன்று லிட்டர். இதையே கோடை காலத்தில் இரண்டு மடங்காகக் குடிக்க வேண்டும். எவ்வளவுதான் தண்ணீரைக் குடிப்பது என்று அலுத்துக் கொள்கிறவர்களும், சுத்தமான குடிநீருக்குச் சிரமப்படுபவர்களும் தண்ணீர்ச் சத்து மிகுந்த பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். இப்படிப் பழங்களை அதிகமாகச் சாப்பிடும்போது நீர்ச்சத்துடன் பல வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் கிடைப்பதால், உடலில் ஏற்படும் பல வெப்பப் பிரச்சினைகள் உடனுக்குடன் சரியாகின்றன.
கொடை வள்ளல் தர்பூசணி

 வெயில் காலத்துக்கு ஏற்ற பழங்களில் முதலிடம் வகிப்பது, தர்பூசணி. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் என்று பல சத்துகள் காணப்பட்டாலும் இதில் 90 சதவீதம் தண்ணீர்ச் சத்துதான் இருக்கிறது. கோடையில் உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்து, நீர்ச்சத்தைச் சமநிலைப் படுத்துவதும் தாகத்தை உடனடியாகத் தணிப்பதில் முன்னிலை வகிப்பதும் இதுவே. எந்த வயதினரும் இதைச் சாப்பிடலாம் என்பது ஒரு கூடுதல் நன்மை.
கோடையில் தினமும் தர்பூசணியைச் சாப்பிடுவதன் மூலம் உடலின் ஆற்றல் 25 சதவீதம் அதிகரிக்கிறது. உடலின் வெப்பநிலை குறைகிறது, ரத்த அழுத்தம் கட்டுப்படுகிறது. தர்பூசணியில் உள்ள ‘ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ்’ எனப்படும் இயற்கைச் சத்துகள் நரம்புகளுக்குக் கூடுதல் சக்தியைத் தருகின்றன. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
வெப்பத்தை விரட்டும் வெள்ளரி

 வெயிலின் கொடுமையிலிருந்து நம்மைக் காக்கும் இயற்கையின் வரப்பிரசாதம், வெள்ளரி. இதன் முக்கியப் பலனே உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுதான். அதிக அளவு நீர்ச்சத்தும் குறைந்த கலோரிகளும் கொண்ட வெள்ளரி, உடலில் நீரிழப்பால் ஏற்படுகிற சிறுநீர்க்கடுப்பைக் குறைக்கிறது. வெயில் காலத்தில் அதிகப்படுகிற சிறுநீர் கல் கரையவும் உதவுகிறது. பிஞ்சு வெள்ளரிக் காயில் உப்பும், மிளகாய்த் தூளும் சிறிதளவு கலந்து சாப்பிடுவது நம் வழக்கம்.
இந்த உப்பில் உள்ள சோடியம் தாது வியர்வையில் இழக்கும் சோடியத்தை ஈடுகட்ட உதவுகிறது. மேலும், வெள்ளரிக்காயுடன் தக்காளி சேர்த்துச் சுவையான ‘சாலட்’ ஆகவோ, பச்சடியாகவோ செய்து வைத்தால் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இனிப்புச் சுவையை விரும்புபவர்கள் வெள்ளரிப் பழத்தைச் சாப்பிடலாம்.
வெயிலில் அதிக நேரம் அலைபவர்களுக்குக் கண்களில் எரிச்சல் ஏற்படும். இந்த எரிச்சலைப் போக்க, வெள்ளரித் துண்டுகளைக் கண் இமைகளின் மீது சிறிது நேரம் வைத்திருந்தால் கண் அயர்ச்சி நீங்கிப் புத்துணர்வு ஏற்படும்.

Saturday, April 18, 2015

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளை க.பரமத்தி ஒன்றிய ஆசிரியர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வழக்கு எண் விவரம். WP.15724, WP.15725, WP.15726, WP.15727, WP.15728/2014.

வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் கட்டாயம் தெரிவிக்க உத்தரவு

 2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள் ஐ.எப்.சி. குறியீடு, கடந்த நிதியாண்டில் இறுதியில் கணக்கில் உள்ள தொகை போன்றவற்றை வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை வருமான வரி செலுத்துவோர் கூற வேண்டும்.
மேலும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டியது அவசியம்.

Friday, April 17, 2015

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்

 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றன
 தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க
மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற
வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வு
மிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்


இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
 எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு,
ஓங்குயிர் தெற்கு,
மத்திமம் மேற்கு,
மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.
தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.
மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
 மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

மிரட்டப் போகும் இணையக் கட்டணம்


Thursday, April 16, 2015

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பயிற்சி நாட்ககளுக்கு ஈடுசெய் விடுப்பு அளிப்பதில் சிக்கல்


வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் -ஒரு வாட்டர் பாட்டிலை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம்?

 பிளாஸ்டிக்கில் நிறைய வகைகள் இருக்கின்றன. ‘பெட் பாட்டில்’களைத்தான் தண்ணீர் குடிக்கப் பயன்படுத்துகிறோம். நெகிழும் தன்மை கொண்ட பாட்டில்கள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் தன்மை கொண்டவை. தொடர்ந்து பயன்படுத்துவது நல்லதல்ல.

அதில் தண்ணீரை ஊற்றி, பாட்டிலை வெயிலில் வைத்தால் பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக உருகி, நீங்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்துவிடும்.
இது உடல் ரீதியாக நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை சரியான வெப்பநிலையில் வைத்திருப்பது நல்லது. பெட் பாட்டில்களை வருடக்கணக்கில் பயன்படுத்தக்கூடாது.
 தண்ணீரில் பிளாஸ்டிக் வாசனை வந்தால் உடனடியாக பாட்டிலை மாற்ற வேண்டும். குழந்தைகள் வாய் வைத்துதான் குடிப்பார்கள். அதனால் கிருமிகள் உள்ளே நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடும். வாய்ப்பகுதி குறுகியதாக இருப்பதால் அடிக்கடி பிரஷ்ஷால் சுத்தம் செய்ய முடியாது. சோப் போட்டு கழுவுவதும் ஆபத்து. குறைந்தது 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது மாற்றிவிடுவது நல்லது.
பாட்டிலின் அடிப்பகுதியில் முக்கோணமிட்டு, அதில் நம்பர் குறிக்கப்பட்டிருந்தால்தான் நல்ல பிளாஸ்டிக். அதிலும் 2, 5 என குறிப்பிட்டிருக்கும் வகை தரமானவை. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைத் தேர்ந்தெடுக்கும்போது அடர் வண்ணங்களை தவிர்த்து விடவும்.

Wednesday, April 15, 2015

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!

 இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:

 1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

 2.அதன் பின் அதனை ஆக்டிவேட் செய்வதற்கான பதிவு செய்தலில் உங்கள் விவரங்களை சமர்பிக்க வேண்டும். உங்கள் நிறுவனம் அளிக்கும் 12 இலக்க எண்ணையும், உங்கள் செல்போன் நம்பரையும் மற்ற விவரங்களையும் அளித்து அதற்கான உறுதி செய்யும் கோடை அளித்தால் உங்கள் செல்போணிற்கு வரும் குறுங்செய்தியில் உள்ள OTPயை டைப் செய்து சமர்பிக்க வேண்டும்.

3.பின்னர் உங்கள் கணக்கிற்கான பாஸ்வேர்டை உருவாக்கி உங்கள் கனக்கில் லாக் இன் செய்து ''டவுன்லோடு'' என்ற பக்கத்திற்கு சென்று டவுன்லோட் பாஸ்புக் என்று இருக்கும் அதனை க்ளிக் செய்தால் இந்த மாதம் வரை உங்கள் நிறுவனம் உங்களிடம் இருந்து பிடித்த பி.எஃப் தொகை மொத்தமாக எவ்வளவு உள்ளது. அதில் உங்களது பங்கு என்ன? உங்கள் நிறுவனத்தின் பங்கு என்ன என்பது தெரிந்துவிடும்.

Thursday, April 9, 2015

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை

+ 2 மாணவர்கள் இணைய மதிப்பெண் நகலை பயன்படுத்தி கல்லூரியில் சேரலாம்

 அரசு கலைக் கல்லூரிகளில் அட்மிஷன் பெற, பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகி, அசல் மதிப்பெண் பட்டியல், டி.சி., வழங்கும் வரை காத்திருக்க வேண்டும். இதனால் ஜூலை, ஆகஸ்ட் வரை சேர்க்கை நடைபெறும்.

இதை தவிர்க்கும் வகையில், உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. உத்தரவில், 'பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் போது, இணையதளத்தில் வெளியிடப்படும் மதிப்பெண் பட்டியல் நகலை பயன்படுத்தி, கல்லூரிகளில் உரிய வகுப்பில் சேரலாம்; அசலுக்காக காத்திருக்க வேண்டியதில்லை'என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்ள பரிந்துரை

 பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முதலிட்டிலிருந்து 25% வரை பெற்றுக்கொள்வதற்கான பரிந்துரையை 15.01.2015 அன்று தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது நிபந்தனைகள்:
1) தேவைகள் a) குழந்தைகளின் மேல் படிப்பு செலவு b) குழந்தைகளின் திருமணம் c) வீடு கட்டுவதற்கு (ஏற்கனவே சொந்த வீடு வைத்துள்ளவர்கள் இது பொருந்தாது) d) கீழ் கண்ட ஏதாவது ஒரு மருத்துவ செலவு நமக்கோ அல்லது நமது குடும்பத்தினருக்கு (மனைவி அல்லது குழந்தை) ஏற்படும் பொழுது.
1. Cancer 2. Kidney Failure (End Stage Renal Failure) 3. Primary Pulmonary Arterial Hypertension 4. Multiple Sclerosis 5. Major Organ Transplant 6. Coronary Artery Bypass Graft 7. Aorta Graft Surgery 8. Heart Valve Surgery 9. Stroke 10. Myocardial Infarction (First Heart Attack) 11. Coma 12. Total blindness 13. Paralysis இது போன்ற தருணங்களில் நாம் நமது CPS முதலிட்டில் இருந்து 25% வரை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதற்கு நாம் CPS திட்டத்தில் குறைந்தது 10 வருடம் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். மேலும் இது போன்று நாம் 3 முறை நமது CPS முதலிட்டிலிருந்து 25 % மிகாமல் பெற்றுகொள்ள முடியும். ஆனால் குறைந்தது 5 வருட இடைவெளியில். அதே வேளையில் மருத்துவ தேவைக்கு மட்டும் இந்த 5 வருட நிபந்தனை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 107 சதவீத அகவிலைப்படியை 113 சதவீதமாக உயர்த்த ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

ஆறாவது மத்திய ஊதிய குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் பணியாற்றும் 48 லட்சம் ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவர்.

வெள்ளை உணவுகள் நண்பனா? எதிரியா?

 “அரிசி, சர்க்கரை, பால் போன்ற வெள்ளை உணவுகளை விட்டால் சந்தோஷமாக இருக்கலாம்’’ என்பது சூப்பர் ஸ்டாரின் ஹெல்த் ஸ்டேட்மென்்ட். மருத்துவர்களைக் கேட்டாலும், “சில ஒயிட் ஃபுட்களை சாப்பிடாதீங்க” என அட்வைஸ் செய்கிறார்கள். உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வீகன் டயட் ஃபாலோயர்களும் வெள்ளை உணவுகளைக் கண்டால், தெறித்து ஓடுகிறார்கள். வெள்ளை உணவுகள் சாப்பிடலாமா? கூடாதா? சாப்பிட வேண்டாம் என்பதன் காரணம்தான் என்ன?

சர்க்கரை

 வெள்ளை உணவுகளில் தொடவே கூடாத உணவு சர்க்கரைதான். சர்க்கரை முற்றிலும் வெண்மையாக இருக்க, பல்வேறு ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு, சுத்திகரிக்கப்படுகிறது. இந்தச் சர்க்கரையை அதிகம் பயன்படுத்துவதால், கல்லீரல் நோய்கள், வளர்சிதை மாற்ற நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், பல் சொத்தை, எலும்பு மெலிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சர்க்கரை நோய் தாக்குவதற்கும், சீக்கிரமே முதுமை அடைவதற்கும் சர்க்கரை ஒரு முக்கியக் காரணம். சர்க்கரைக்குப் பதில் வெல்லம் மற்றும் உலர் பழங்களில் இருந்து எடுக்கப்படும் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
சமையல் உப்பு

 கடலில் இருந்து கிடைக்கும் உப்பு, சற்றே பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால், அயோடின் உப்பு தயாரிக்கும்போது, அதிக வெப்பத்தில் உப்பை பிளீச் செய்கிறார்கள், இந்த முறையால், உப்பில் இயற்கையாக இருக்கும் பல்வேறு தாது உப்புக்கள் வெளியேறிவிடுகின்றன. அயோடின் அதிகளவு நிறைந்த, தூள் உப்பை அதிகம் உணவில் சேர்ப்பதால், இதயநோய்கள், ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற நோய்கள் எளிதில் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, இயற்கையில் கிடைக்கும் கடல் உப்பு, இந்துப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். இந்துப்பில் பொட்டாசியம், மாங்கனீசு, அயோடின், இரும்புச்சத்து, துத்தநாகம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் இருக்கின்றன.
மைதா

முழு கோதுமையைப் பட்டைதீட்டி, நார்ச்சத்துகளையும் பிற வைட்டமின் சத்துக்களையும் அறவே நீக்கி, ரசாயனங்களைச் சேர்த்து ப்ளீச் செய்து, தயாரிக்கப்படும் பொருள் மைதா மாவு. இதில், கார்போஹைட்ரேட் சத்து மட்டுமே இருக்கும். நூடுல்ஸ், கேக், பீட்சா, பர்கர், பரோட்டா என, ஜங்க் உணவுகளில் பெரும்பாலும் மைதா மாவே பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவுப்பொருட்களில் சர்க்கரை மற்றும் எண்ணெய் அதிக அளவு சேர்க்கப்பட்டு இருக்கும். எனவே, இது அதிக கலோரிகள் கொண்டது. தொடர்ந்து மைதாவால் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது, சர்க்கரை நோய் எளிதில் தாக்கலாம். மேலும், மலச்சிக்கல், குடல் புற்றுநோய் போன்றவை வருவதற்கும் மைதாவே காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனவே, மைதாவுக்குப் பதிலாக முழு தானியமான கோதுமையை வாங்கி, அப்படியே அரைத்து, சமையலுக்குப் பயன்படுத்தலாம். சிறுதானிய மாவுகளைப் பயன்படுத்தும்போது, உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் கிடைப்பதோடு, சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
பால்

 எளிதில் ஜீரணமாகாத ஒரு உணவு, பால். தற்போது, பசுக்கள் அதிகமாகப் பால் சுரக்க ஹார்மோன் ஊசிகள் போடுவதாலும், ஆன்டிபயாடிக் மருந்துகளை மாட்டுக்குத் தருவதாலும், பாலில் யூரியா கலப்பதாலும் பால்கூட விஷமாக்கப்பட்டுவிட்டது. இதனால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் வருகின்றன. பாலில் இருக்கும் கேஸியீன் (Casein) என்ற புரதம், புற்றுநோய் வரக் காரணமாக இருக்கிறது என பல ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, பசும்பாலுக்குப் பதிலாகத் தேங்காய்ப் பால், சோயா பால், வேர்க்கடலைப் பால், பாதாம் பால் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பாலில் இருக்கும் கால்சியத்தைவிட எள்ளில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது. எனவே, எள்ளுச் சட்னி, எள்ளுப்பால், எள்ளு சாதம் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
அரிசி

உலக அளவில், சர்க்கரை நோயாளிகள் அதிகம் இருப்பது இந்தியாவில்தான். இதற்கு அரிசி உணவும் மிக முக்கியக் காரணம். அரிசி நன்றாகப் பட்டைதீட்டப்பட்டுத்தான் கிடைக்கிறது. சாதம், வெள்ளைவெளேரென இருந்தால்தான், உயர் ரக அரிசி என நினைத்து, மக்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனர். பாலீஷ் செய்யப்பட்ட அரிசியில் அறவே நார்ச்சத்து கிடையாது. குறைவாகச் சாப்பிட்டாலும் திருப்தி ஏற்படாது. இதனால், அதிகம் சாப்பிடுவார்கள். அரிசியில் உள்ள மாவுச்சத்து, கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும். நாளடைவில் சர்க்கரை நோய் வர அரிசி ஒரு முக்கியமான காரணியாக இருக்கும். தவிடு நீக்கப்படாத பாலீஷ் செய்யாத பழுப்பு அரிசி, சிவப்பு அரிசியைச் சாப்பிடுவதே நல்லது.
‘பழுப்பே’ பெஸ்ட்!

 வெள்ளை நிற உணவுகள் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பது உண்மைதான். அதற்காக, முற்றிலும் தவிர்த்துவிடுவதும் சாத்தியம் இல்லை. சர்க்கரையை ஒரு நாளைக்கு 30 கிராம் எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரைக்குப் பதில், பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்றவற்றைப் பயன்படுத்தலாம். வெல்லம் பயன்படுத்துபவர்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும் வெல்லத்தைத் தவிர்த்து, இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் வெல்லம்தான் பயன்படுத்த வேண்டும். பழுப்பு நிறத்தில், பிளீச் செய்யப்படாமல் கிடைக்கும் சர்க்கரையை சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
அதேபோல், உணவில் உப்பும் அதிகம் சேர்க்கக் கூடாது. அயோடின் உடலுக்கு அவசியம் எனவே, கல் உப்பு, தூள் உப்பு இரண்டையும் சரிவிகிதத்தில் சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும். மைதாவில் கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது. எனவே, முற்றிலும் அதைத் தவிர்ப்பதுதான் நல்லது. பாலுக்கு மாற்றாக கால்சியத்தை எள், கேழ்வரகு மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும், குழந்தைகளை எளிதாகப் பால் சாப்பிடவைக்க முடியும். எனவே, குழந்தைகளுக்குப் பால் சிறிது அளவு கொடுக்கலாம். பெரியவர்கள் பால் சாப்பிடுவதற்குப் பதிலாக, கேழ்வரகை அன்றாடம் சேர்த்துக்கொள்ளலாம். வெள்ளை அரிசிக்கு மாற்றாக, பழுப்பு அரிசி, கைகுத்தல் அரிசியைப் பயன்படுத்தலாம்.

தமிழக தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழியாவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சான்றோர் தமிழ்க் காப்பு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை: மத்திய கல்வி உரிமைச் சட்டம் 2009-இன்படி, தமிழக தொடக்கப் பள்ளிகளில் தமிழே பயிற்று மொழி என்று கொண்டுவர சட்டம் இயற்றப்பட வேண்டும். அத்துடன், இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற வேண்டும்.
இதுதொடர்பாக பிரதமரைச் சந்தித்து தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டம் தமிழகத்தில்.....

இந்தத் திட்டத்தின்படி, தடுப்பூசி மருந்துகள் வழங்காமல் விடுபட்ட இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 201 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.


ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் இந்த மருந்துகள் வழங்கப்படும். முதல் கட்டமாக ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை முகாம் நடைபெறும். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கோவை ஆகிய எட்டு மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரிட்டனில் இனி தந்தையும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்: அரசின் முடிவால் மகிழ்ச்சி பெருக்கில் ஆண்கள்

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த விடுமுறையில் பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது.


அந்நாட்டில் இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது போல, தந்தைக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம்.

அதாவது கணவன் 25 வாரமும், மனைவி 25 வாரமும் விடுமுறையை பிரித்துக்கொண்டு தங்கள் அன்பான குழந்தையை இருவரும் பராமரிக்கலாம். குழந்தையை தத்தெடுப்பவர்களும் இந்த 50 வார விடுமுறையை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது