just think

Sunday, October 26, 2014

சிதறுண்டு கிடந்தோம் !
உணர்ச்சிப் பிரவாகத்தில் 
ஒற்றுமை குறித்த 
சிந்தனையற்றுப்போனோம் !
ராஜபாட்டைகளின் 
காலடிச் சுவட்டில்
கேட்பாரற்றுக் கிடந்த நாட்களில் 
ஒற்றுமை தேசத்தை 
ஒருங்கிணைக்கத் துடித்து 
பாரதியின் 
அக்கினிக் குஞ்சை 
இரவல் வாங்கி 
நல்லதோர் பாரதம் உருவாக்கிட 
ரௌத்திரம் பழகியவனின் 
பிறந்த தினத்தில் 
சபதமேற்போம் ! - நாம் 
ஒற்றுமையுடன் உயர ......

ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் அக்டோபர் 31 தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.                                                                                                                                                                                                                                                

Saturday, October 25, 2014

ஆசிரியர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.