சிதறுண்டு கிடந்தோம் !
உணர்ச்சிப் பிரவாகத்தில்
ஒற்றுமை குறித்த
சிந்தனையற்றுப்போனோம் !
ராஜபாட்டைகளின்
காலடிச் சுவட்டில்
கேட்பாரற்றுக் கிடந்த நாட்களில்
ஒற்றுமை தேசத்தை
ஒருங்கிணைக்கத் துடித்து
பாரதியின்
அக்கினிக் குஞ்சை
இரவல் வாங்கி
நல்லதோர் பாரதம் உருவாக்கிட
ரௌத்திரம் பழகியவனின்
பிறந்த தினத்தில்
சபதமேற்போம் ! - நாம்
ஒற்றுமையுடன் உயர ......